Sunday, December 26, 2010

சுனாமி

வேதனை வீட்டு வாசலில்
கோலம் போட
தண்ணீர் தெளிக்கையில்
அடித்துக்கொண்டு போன 
எறும்புகளும் அதன் புற்றுகளும் 
அவற்றின் வலி புரியவில்லை 
"சுனாமி" வரும் வரை..