Monday, December 24, 2012

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.


இனி சதங்கள் எண்ண வேண்டிய அவசியம் இல்லை.

இனி எந்த புதுமுக பந்துவீச்சாளருக்கும் கனவு  விக்கெட் என்று ஒன்று இருக்க போவதில்லை.

இனி யாரும் விக்கெட் விழுந்த விரக்தியில் சேனலை மாற்ற தேவையில்லை.

இனி இந்தியா சுமக்கும் அனுபவசாலி என்றும் இந்தியாவை சுமக்கும் அனுபவசாலி என்றும் யாரும் இருக்கபோவதில்லை.

இனி எந்த பந்துவீச்சாளரும் பயத்தோடு பந்துவீசபோவதில்லை.

இனி பள்ளி,கல்லூரி,ஆபீஸ்க்கு எல்லாம் லீவ் போட்டு கிரிக்கெட் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கபோவதில்லை.

இனி எல்லா பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு எந்த கிரிக்கெட் வீரரும் களமிறங்கபோவதில்லை.

இனி கிரிக்கெட்டை ஒளிபரப்பும் விளையாட்டு சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் எல்லாம் உயரபோவதில்லை.

இனி நாம் யார் ஃபேன் என்ற கேள்விக்கு பதில் உடனே வரபோவதில்லை.

இனி யார் ஓய்வு பெறும்போதும் இப்படி புலம்பிக்கொண்டு எவனும் அழுவானா என்பதுகூட தெரியவில்லை...

சச்சின்.சத்தியமாய் ஒரு சகாப்தம்.