Monday, November 15, 2010

என்னவளே..

மதுவில் மறு வாழ்வு
புகையில் புதைந்த உதடுகள்
என் கவிதை கிறுக்கல்களின் கதா நாயகனாய் கல்லறை
கரும் புதருக்குள் ஒளிஞ்சிருக்கும் முகம்
நடை தெரிந்தும் தடுமாறும் கால்கள்
விழி உருண்டும் நகராத பார்வை
கண்ணீரால் நிறையும் என் கவிதை காகிதங்கள்
பட்டினி இருந்தும் பசி இல்லை
கனவு கண்டும் தூக்கம் இல்லை
விளக்கு எரிந்தும் இருளில் வாழ்க்கை
விடுதலை பெற்றும் அடிமையாய் மனம்
என்னவளே...
சிறகிருந்தும் ஒடித்து கொண்டு வாழ்கிறேன் உன் கூண்டில் அடைபட..

2 comments: