Monday, November 15, 2010

சடலம்

தளிருகளின் 
பார்வையை பறித்து 
கால்களை முடமாக்கி 
உணர்வுகளை ஊனமாக்கி
கனவுகளை கிழித்தெறிந்து 
வாயையும் கைகளையும் மட்டும் கரிசனத்தோடு காவல் காத்து 
கையில் திருவோடை அணிகலனாய் பூட்டி 
வாயில் பிச்சை என்ற வார்த்தைக்கு மட்டும் உரமிட்டு வளர்த்த 
அந்த சடலங்கள் இன்றே செத்தொழியட்டும்.

2 comments: